உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெள்ளை வர்ணத் தொட்டி ஒன்றை
நாடிச் சென்றது;
மேனி முழுதும் அதில் நனைத்து
வெளியில் வந்தது.

திரும்பி வந்து புறாக்கள் நடுவே
சேர்ந்து கொண்டது.
திருட்டுத் தனமாய்த் தானி யத்தைத்
தின்ன லானது.

கறுப்புக் காகம் வெள்ளை யாக
வந்தி ருப்பதைக்
கண்டு பிடிக்க வில்லை, அந்தப்
புறாக்கள் கூட்டமே.

களிப்பு மிகவும் கொண்ட காகம்
தன்னை மறந்தது;
‘காகா’, ‘காகா’, ‘காகா’ என்றே
கத்த லானது.

எளிதில் உண்மை கண்டு கொண்ட
புறாக்கள் யாவுமே
எதிர்த்து அதனைக் கொத்திக் கொத்தி
விரட்டி அடித்தன.

தப்பிப் பிழைக்க எண்ணிக் காகம்
உடன் பறந்தது.
தனது இனத்துக் காகக் கூட்டம்
தனை அ டைந்தது.


35