உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஈசாப் கதைப் பாடல்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எவர்க்கும் உதவி செய்யாமல்,
ஏதும் இன்பம் அடையாமல்,
பவுனாய்ச் சேர்த்துத் தினம்தினமும்
பார்த்துக் காத்து வருகின்றீர்.

ஒற்றைக் காசை நானெடுத்து
ஒளித்தது மிகமிக மிகப்பெரிய
குற்றம் என்றீர்; என்னையுமே
கொல்லுவ தாக மிரட்டுகிறீர்!

ஒற்றைக் காசை ஒளித்ததற்கே
உயிரை வாங்குவ தெனச்சொன்னால்,
இத்தனை காசையும் ஒளிப்பவர்க்கே
எப்படித் தண்டனை கொடுப்பதுவோ!'”

என்றே கூறிப் பொற்காசை
எறிந்தது; குருவி பறந்ததுவே!
ஒன்றும் கூறிட முடியாமல்
உயரப் பார்த்தனர் கருமியுமே!


43