இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முதல் காவியம்
ஈரோட்டுத் தாத்தா என்ற இந்நூல் 1948 ஆம் ஆண்டு ஏப்பிரல் மாதம் பொன்னி வெளியீடாக வந்தது.
முதலில் எழுதிய “கொய்யாக் காதல்” என்ற சிறு காவியமும் அதே ஏப்பிரல் மாதம் வெளிவந்தது.
இரண்டு நூல்களுக்கும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தம் ‘குயில்’ இதழில் ‘வெண்பா’வில் மதிப்புரை எழுதினார். வேறு பல திராவிட இயக்க இதழ்களிலும் மதிப்புரைகள் வெளிவந்தன.
புரட்டுக்களை வெளிப்படுத்திய பெரியாரின் புரட்சிக் கருத்துக்கள் இளமைப் பருவத்தில் என்னை ஈர்த்ததில் வியப்பில்லை. அந்த ஈடுபாட்டின் வெளிப்பாடுதான் “ஈரோட்டுத் தாத்தா”
இருட்டைக் கிழிக்கும் சோதியாய் வந்தவர் ஈரோட்டண்ணல், பெரியார் பணிச் சிறப்பை விளக்கிப் பெருங் காவியம் ஒன்று படைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறேன் அறிவியக்கவாதிகளின் ஆதரவு என் பணியை விரைவுபடுத்துமென நம்புகிறேன்.
-நாரா நாச்சியப்பன்