பக்கம்:உடற்கல்வியைக் கற்பிக்கும் முறைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

43

இவற்றைப் பிரட்சினை என்பதை விட, நடை முறை நிகழ்ச்சிகள் என்று கொண்டோமானால், சிக்கலின்றி செல்லவும், சிறப்பாகச் சொல்லவும், மாணவர்கள் மனதை வெல்லவும் முடியும்.

இவற்றையும் சற்று விரிவாகக் காண்போம்.

1. வகுப்பில் மாணவர்கள்

மாணவர்களின் எண்ணிக்கை ஒரு வகுப்பிற்கு 40 முதல் 45 என்பது பொதுவான விதி. ஒரு வகுப்புக்கு 25 பேர்கள் என்பது உத்தமமானது என்பது நியதி. என்றாலும், சூழ் திலைக்கேற்ப, வருகின்ற மாணவர்களின் எண்ணிக்கையைக் ஆண்டு வெதும்பாமல், தருகின்ற பாடங்களைக் கொண்டே, ஆசிரியரின் தகுதியும், திறமையும், நிர்வாகச் சிறப்பும் வெனிப்படுகின்றது.

2. இடமும் நேரமும்

பள்ளியின் வகுப்புக்கும், ஆடுகளத்தின் இடமும் உள்ள டைவெளியை அனுசரித்தே, வகுப்பை ஆரம்பிக்கவும், விடுவிக்கவும் முடியும். ஆகவே, மாணவர்கள் வந்து சேர் வேண்டிய குறிப்பிட்ட இடம்: குறிப்பிட்ட நேரம்; முதலியவற்றை ஆசிரியர் கூறிட வேண்டும்.

தேவையான சீருடை அணியவும், வரிசையாக வந்து சேரவும் கூடிய நேரத்தையும் குறித்துக் காட்ட வேண்டும்.

ஆசிரியரும் முன் கூட்டியே அந்த இடத்திற்கு வந்து, காத்துக் கொண்டிருந்து, முன்னேற்பாட்டுடன், தயாராக இருக்க வேண்டும்.