இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காதலோ காதல்
❖
'காதல் என்ன
கத்தரிக் காயா'
என்ற தொடர்கதை
'இரவில்' எழுதிய
வாணி மணாளன்
பகலில்
வாரச்சந்தையில்
கிலோ விலை ரூபாய்
இரண்டெனக் கேட்டதும்
அயர்ந்தார்; கண்களை
அகலத் திறந்தார்,,...
காய்கறிக்காரன்
கடுப்பில் கேட்டான்
'அத்தனை மலிவாய்
அள்ளிக் கொள்ள
கத்தரிக்காய் என்ன
காதலா...?'
20