இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சரண்
❖
ம.பி. முதல்வர்
மகிழ்ச்சி அடைகிறார்......
காட்டில் மலையில்
கண்படாதிருந்த
இரவுக் கொள்ளையர்
இதயம் வெளுத்துச்
சரணடைந்தார்களாம்
சபதம் செய்தார்களாம்
ம.பி. முதல்வர் -
மகிழ்ச்சி அடைகிறார்......
அது சரி,
நாட்டில் தெருவில்
நடமாடு கின்ற
பாக்கியுள்ள
பகற்கொள்ளையர்கள்
என்றைக்குச்சரண்
அடைய எண்ணமாம்!
'ம.பி. முதல்வர்
மகிழ்ச்சி அடைகிறார்.
மக்கள் எப்போது
மகிழ்ச்சி அடைவதாம்?
46