எழில் விருத்தம்
11
"கூலி ஆட்களின் கொதிமனம் போலொளி
குன்றிய குளிர்மாலை!" - 4:9
"குந்தி அன்னை குளிர்கால் கவைக்கக்
குழந்தை மணல்தோண்டச்
சிந்தும் கிளிஞ்சல் சிறுவர் பொறுக்கத்
திரைகால் உடல்நனைக்க
முந்தும் அலைகள் கரையைத் தாவி
மோதி முரசார்க்கச்
சிந்தைக் கின்பம் வாரி வழங்கும்
திரைபாய் கடலோரம்!” - 7:4
“வழியினில் கண்ட மண்வளம் யாவும்
வணிகனைப் போலுடன் ஈட்டிக்
கொழித்தனை மருதம்' - 8:3
"அறிவிலா மக்கள் அணுகிய போதும்
அவரவர் கீழ்மையை மாற்றும்
அறிவுடை யான்ற மேலவர் போல
அணுகிய கழிவு நீர் யாவும் -
நெறியொடு மாற்றி நீர்மையைத் தேக்கி" - 8.7
கவிதைக்குக் கற்பனை கண்களைப் போன்றது. “உயர்ந்த உணர்ச்சிகள் ஊற்றெடுப்பதற்குரிய சிறந்த நிலைக்களன்களைக் கற்பனை மூலம் அமைத்துத் தருவதே கவிதை என்பர்.
கவிஞனுடைய உள்ளத்தை நிழற்படம் போல படம் பிடித்துக் காட்டும் ஆற்றலுடையது கற்பனை.
கற்பனையின் சிறப்புக்கு உறுதுணையாக விளங்குவன உவமை உருவகம் போன்ற அணிகள்.