20
வாணிதாசன்
இரவு இன்பச் சுவையூட்டி நிற்கின்றது. 'ஊரிட்ட இருள் கிழிக்கும் விளக்கெல்லாம் அறிஞர் உரையொக்கும். என்பதில் தான் எத் துனைப் பொருட்செறிவு பாருங்கள்!
'இல்லடங்கா திருக்கின்ற இளங்காலை எருமை.
இரவினிலே ஒன்றிரண்டு கட்டுகயிறறுத்தே
கொல்லையிலே பயிர் மேயும் கொட்டகையைக் குறுகும்!
கொடுமைக்கும் அழிவுக்கும் நீ பொறுப்பா இரவே?'
எனவரும் அடிகளில் காணும் உள்ளுறையுவமம் கண்டு இன்புறத்தக்க தொன்றாகும்.
'அருவி' நீர்வீழ்ச்சியாக மாறுவதைச், 'சொல்லில் வல்லவர் பேருரை நயம்போல் தொடர்ந்து வீழ்ச்சியாய் மாறினாய்' எனக் குறிப்பிடுகின்றார்.
'வெள்ளை நீரினை வழங்கியும் குறையா வள்ளல் தன்மையைக்,
கொள்ளக் கொள்ளவும்
குறைவுறா தளிக்கும்
குன்றம் சூழ்மலை அருவியே!'
என வியக்கின்றார் கவிஞர்.
இங்கு எடுத்துக்காட்டப்பட்டவை ஒரு சிலவே. இவை போன்று கற்பார்க்கு இனிமை பயக்கும் கவின்பெறு பாடல்கள் அனைத்தையும் கற்றுத் தெளிதல் தமிழர்களின் தலையாய கடமையாகும்.
இந்நூல் புலவர்களுக்குப் புது விருந்தாகும்.