38
மாலை
வட்டத் தாமரை இலையினில் கண் வளர்
வாளைகள் நீர்மோதத்
தட்டி ஒட்டிடும் ஆயனின் கழியெனத்
தம்மனைக் கன்றுள்ளிக்
குட்டை மேவிய நாகுகள் வாலினைத்
தூக்கியே குதித்தோட
எட்டி மேற்றிசை மலையிடைப் பரிதிசாய்
எழில்மிகு சுடர்மாலை !................................................ 3
மேலை வானிடை விரவிய செந்நிற
மிகுந்திடு ஒளிவெள்ளம்
சாலை மாவிளந் தளிர்நிறம் பூநிறம்
சார்ந்ததாய்த் தலைதாழ்த்திச்
சோலை புக்கிடும் இணையிணைக் குருவிகள்
தோப்பினைக் குறுகாமுன்
மாலை மங்கிடச் செவ்வொளி மங்கிடும்
மலர்மண இருள்மாலை !................................................... 4
கன்று கூப்பிடக் கறவைகள் ஊர்புகக்
காரிருள் கீழ்நோக்க
முன்றில் நீள்சடை முதுகினை ஊன்றியே
முன்னுள வெளிநோக்கிச்
சென்ற ஆளனின் தோளினை உன்னிடு
தேமொழி மடமாதர்
என்று மீளுவர் சென்றவர் எனநினைத்
தேங்கிடு துயர்மாலை !...................................................... 5