பக்கம்:எழில் விருத்தம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எழில் விருத்தம் 37 அங்கும் இங்குமாய்ச் சிதறிய வெண்முகில் அடிக்கடி ஒளிமாறப் பொங்கு செங்கடல் நீள்மலை ஒப்பவே புத்தெழில் அமுதூட்டித் - திங்கள் நாணியே சிரித்தெழ ஊர்ப்பொதுத் தெருவெலாம் விளக்கேற்ற மங்கு செங்கதிர் தாமிரத் தட்டென . மயக்கிடு மருண்மாலை! 1. பூத்த தாமரை வானிடைப் போய்விழு பொற்கதிர்ப் பொலிவோடு மூத்த தாமுயிர் முன்நகு அல்லியின் முகத்தினில் விழிக்காமல் போர்த்து வோம்முகம் என இதழ்ப் போர்வையால் பொலிமுக விழிபொத்தப் பார்த்த பேடைகள் ஆணினை விளித்திடும் படுகதிர் சாய்மாலை ! - 2