எழில் விருத்தம்
43
ஒன்னார் படையினை வென்றே
ஒள்முர சார்த்திடல் ஒப்ப
முன்னர் எழும்பியே தாவி
முன்னுள சேவலின் உச்சி
தன்னைப் பலமுறை முள்ளால்
தாக்கிடும் ; வென்றுபின் கூவும்!
தன்முன் புறமுது கிட்ட
சேவலைத் தாக்குமோ சேவல்?............................. 6
கொண்டை நிமிர்த்தொலி யார்க்கும்
கோழியின் சண்டையைக் கண்டோ
முண்டி எழுந்தெதிர் வந்தே
மூண்டிடும் நீள்பகை சீறிப்
பண்டைத் தமிழ்நில மக்கள்
பகையடி பிற்பட மீண்டும்
சண்டை இடுபவர் மீதே
தம்படை ஏவுதல் இல்லை?................................... 7
மாட்டுத் தொழுவரு குள்ள
மண்ணிடைக் குஞ்சுகள் மேயக்
கூட்டி ஒதுக்கிய குப்பைக்
குப்பலில் பெட்டையும் ஏங்கும்;
வீட்டு நெடுவளைக் கூரை
மேலிருந் தேநடை காட்டி
வாட்டம் விலக்கிடு காதல்
மணிக்குரல் காட்டுமே சேவல்!............................. 8