பக்கம்:கடவுள் பாட்டு.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

மூல முதலே உனைநம்பி
முயல்வார் செயலைத் தீராகு
காலம் என்ன செய்துவிடும்?
கண்டம் என்ன செய்துவிடும்?

66


ஆளும் ஈசா உன்னருளை
அடைந்தார் செய்யும் செயலெல்லாம்
நாளும் கோளும் யாதேனும்
நன்றாய் முடியும்! பலனுண்டாம்!
சூழும் காலம் நன்றாகத்
தொடங்கும் செயல்கள் என்றாலும்
வீழும் என்ருல் நீயருளா
விடிலந் நேரக் குறையாமோ?

67

ஊரை வருத்திச் சேர்த்ததெல்லாம்
ஒன்றாய்க் கூட்டிப் பெருமையுடன்
பேரை நாட்டிக் கொண்டிடவே
பெரிதாய்க் கோயிற் பணிசெய்தோர்.
கூரை யிருக்கச் சுவரிருக்கக்
குடிய றுந்து போனதெலாம்
யாரை வைத்துச் சொல்வதவர்
யாரு மில்லை பெருமானே!

68

உழையா தேற்ற பொருளெல்லாம்
உருவாகாமல் போயிற்றே
பிழையாய்ச் சேர்ந்த பணமெல்லாம்
பிழைக்கும் மருந்துக் காயிற்றே.
அழையா திருக்கும் போதேவந்
தன்பர்க் கருளைப் புரிவோனே
விழையா திருக்கப் புரிவாய், தீச்
செல்வம், வெல்லும் மனந்தந்தே!

69
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கடவுள்_பாட்டு.pdf/28&oldid=1202017" இலிருந்து மீள்விக்கப்பட்டது