ராஜம் கிருஷ்ணன் 25
போட்டு முடிவிட்டு ‘உள்ளே வாரும்’ என்றழைத்துச் செல்கிறாள். தட்டி கட்டிய திண்ணையை அடுத்த உள் வீட்டில கம்போ கேழ்வரகோ புடைத்த தவிடு பரந்திருக் கிறது.
துணிகள், அழுக்காகத் தொங்கும் கொடி. சுவரிலும் கிறுக்கல்களும் சுண்ணாம்புத் தீற்றலும் சிவந்தசி சாந்துக் கையின் தீற்றலும் நிறைந்திருக்கின்றன. ஐந்து வயக மதிக்கக் கூடிய பையன் ஒருவன் காகிதத்தைச் சுருட்டி சோப்பைக் கரைத்துப் பின் தாழ்வரையில் ஏதோ முயற்சி செய்து கொண்டிருக்கிறான்.
சிதம்பர வடிவு ஒடிப்போய் அவன் முதுகில் இரண்டு வைக்கிறாள். அவன் கையிலிருந்து ஒரு நீல சோப்புத் துண்டை மீட்கிறாள்.
கரியாப் போற பய, சோப்பைக் கரைக்கிறதே வேல!’ என்று பின்னும் ஒர் அறை வைக்க, அவன் வாயைப் பிளந்து கொண்டு இயன்ற மட்டும் குரலெடுக்கிறான்.
“இங்க வால...’ என்று மருதாம்பா அழைப்பது கண்டு அவன் திறந்த வாயை முடியும் மூடாமலும் திகைத்தவாறே அவளுடைய கையிலிருக்கும் பழத்தால் சர்க்கப்பட்டு வருகிறான். மிட்டாய்ப் பெட்டி, கடலை எல்லாம் வெளி யாகின்றன.
பொன்னாச்சி மாமா ஊரில இல்ல. திர்நேலி போயி ருக்கா. மாப்ளக்கி என்ன ஒடம்பு’
‘போன வருஷம் நீர்க்கோவ வந்து காலு நீட்ட முடியாம இருந்தாவ. அப்பமே பாதி நா சோலி எடுக்க முடியாமதா இருந்தாவ. பொறவு என்னேய? . ரொம்பவும் மனத்தாவப் படுறாவ. நா எந்த மொவத்த வச்சிட்டுப் போவமின்னு, நாம போவம்னாலும் கேக்கல. அல்ல நீரு செவந்தனியக் கூட்டிட்டுப் போய் வாரும்னாலும் எப்பிடிப் போவமின்னு தாவப்படுறாவ. பிள்ளியளப் பாக்கணுமின்னும் மனசு
- ?