ராஜம் கிருஷ்ணன் 33
வந்து பாக்கச் சொல்றே, அவியவிய சொத்த அவியவிய கிட்ட ஒப்படய்கிறதுதான மொறை?”
இந்த நியாய வார்த்தைகளுக்குமேல் பேச்சுக்கு இட மேது? -
பொன்னாச்சியுடன் தானும் புறப்பட வேண்டும். என்று ஞானம் அழுகுறான். குஞ்சரி அவளுக்கு அம்மா வைத்துப் பின்னியிருக்கும் ரோஸ் நாடாவையும், அவள் உடுத்தியிருக்கும் ரோஸ் சேலையையும் தொட்டுப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள்.
பொன்னாச்சி எல்லோரிடமும் விடை பெற்றுக் கொள் கிறான். தெருவே அவர்களை வழியனுப்புகிறது. முன்சீஃப் வீட்டு ஆச்சி இல்லை. கோயில்காரர் வீடு, கொல்லாசாரி வீட்டு ஆச்சி எல்லோரிடமும் பொன்னாச்சி சுருக்கமாக விடை பெற்றுக் கொள்கிறாள்.
மாகாளி அம்மன் கோயிலில் கும்பிட்டு வேண்டிக் கொள் கிறான். மாலை வெயில் மஞ்சள் முலாம் பூசத் தொடங்கு கிறது. சிவந்தகனி பஸ் நிறுத்தத்தில் ஏற்கெனவே வந்து நிற்கிறான். பொன்னாச்சியை அவன் வியப்புடன் பார்த்த வண்ணம், ‘இதுதாமவளா?’ என்று கேட்கிறான்.
“ஆமா, அது பய்யன்...”
மருதாம்பா சொல்லி முடிக்கு முன் பஸ் ஒன்று வருகிறது. இசக்கி இப்போதும் இடுப்பில் தங்கச்சியுடன் நிற்கிறது. :பொன்னாச்சி அக்கா, துரத்துடிக்கா போற?” என்று விழிகள் விரிய அவள் கேட்கையிலேயே அவர்கள் வண்டிக்குள் ஏறிக்கொள்கின்றனர். பொன்னாச்சி நின்ற வண்ணம் அவளுக்குக் கையை அசைக்கிறாள்.
பஸ் கிளம்பி விடுகிறது.