நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
21
ரோம் சாம்ராச்சிய எழுச்சியும்-வீழ்ச்சியும் அடைத்த விபரீத மனவிளைவுகளைப் பார்க்க ரோம் நகர் சென்றார்! கண்டார்! ரசித்தார்! பாடம் பெற்றார்!
பைரன், ஷெல்லி போன்ற புகழ் பெற்ற மாபெரும் கவிஞர்கள் பிரிட்டனை விட்டு, ரோமாபுரி நகர் வரக் காரணம் என்ன? தங்கிய சூழ்நிலை என்ன? கவிதை உணர்ச்சிகளை எவ்வாறு அவர்கள் தீட்டிக் கொண்டார்கள் என்ற விவரங்களை தந்தார்.
பழையன கழிதலும் புதியன புகுதலும் எவ்வாறு ரோம் நகருக்குள் ஆட்சி செய்கிறது? என்பதை எல்லாம் ஊடுருவி கண்ட இளம் கவி சரோஜினி பற்பல புதுமைக் கிளர்ச்சிகளைத் தமது எண்ணமென்ற சானைக் கல்லிலே தீட்டிக் கொண்டார்! அதன் பளபளப்பான கூர்மையால் ஆங்கில மொழி ஆப்பிளைக் கீற்றுக் கீற்றாக அறிந்து அரசியல் வறுமையிலே பசித்த மக்களுக்கு தீனியாக்கினார்!
கி.பி. 1893ம் ஆண்டு இளம் கவிக்குயில் குமாரி சரோஜினி தேவி ஐதராபாத் நகரம் திரும்பினார். தந்தை, தம்பிகள், தங்கைகள் வரவேற்றனர். புதுமையுடன் திரும்பிய ஒரு இளம் பெண்கவியை!
இலண்டன் மாநகரத்திலே இருந்து குமாரி சரோஜினி இந்தியா திரும்பி ஐதராபாத் மாநகர் வந்து சேர்ந்தார்; மகள் நாம் ஆசைப்பட்டக் கல்வித் துறையை முடிக்காமல் திரும்பிவிட்டாரே என்ற மனக்கவலை அகோரநாதருக்கு ஏற்பட்டது.
க.ச-2