நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்
கோமகன் மன்னிப்புக் கேட்டார்!
உலக நாடுகளில் பலவிதமான ஆட்சிகள் நடந்தன; நடைபெறுகின்றன. அவை எவை? எந்த ஆட்சிக்காகக் கவிக்குயில் சரோஜினி இங்கிலாந்து நாட்டிலே போராடினார் என்பதை பார்ப்போம்.
★ ஆள்பவர் இல்லாமல் நடக்கும் ஆட்சி; அதாவது அதற்கு அராஜக ஆட்சி Anarchy; என்று பெயர்!
★ 'உயர்குடி மக்கள் ஆட்சி' Aristocracy; என்ற ஓர் ஆட்சி உண்டு!
★ ஏக ஆட்சி அதாவது தன்னாட்சி Autarchy என்ற பெயருடைய ஆட்சி ஒன்று இருந்தது!
★ ஏகாதிபத்தியம் ஆட்சி, அல்லது தன்னரசு என்ற பெயரில் Autocracy ஒன்று நடந்தது.
★ குடியாட்சி அல்லது ஜனநாயக ஆட்சி Democracy என்ற ஆட்சியில் நாம் இன்று வாழ்கின்றோம்.
★ இரட்டை ஆட்சி என்ற பெயரில் கி.பி. 1921-ம் ஆண்டு இந்தியாவில் Dyarchy நடைபெற்றது.
★ சர்வாதிகாரம் என்ற பெயரில் Dictatorship ஆட்சிகள் நடந்ததை நாம் வரலாற்றில் படிக்கின்றோம்!
★ Dyarchy என்ற இரு வகை ஆட்சி கிரேக்க நாட்டில் நடந்துள்ளதாகச் சரித்திரம் கூறுகின்றது.