21
21
கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்
வசைபாடக் காள மேகம்
பண்பாக உயர் சந்தம் படி க்காச
லாதொருவர் பகரொ ணாதே'
என்னும் தனிப்பாடல், குறிப்பிட்ட இலக்கியம் பாடுதலில் பிறப்புடையார் இவர்இவர் எனத் தொகுத்துணர்த்து ன்ெறது. இப் பாடலை நோக்கின் இவர் கோவை, உலா, அந்தாதி என்னும் சிற்றிலக்கியம் மூன்றும் பாடுதலில் வல்லார் என அறியலாம். ஆனால் இப்போது இவர் பாடிய மு.வருலா மட்டுமே கிடைத்து இவரை உலா வல்லார் என்பதனை மெய்ப்பித்துக் கொண்டிருக்கிறது. கோவையும் அந்தாதியும் கிடைக்கவில்லை. இவ்விலக்கியங்களும் இவர் பாடியிருத்தல் வேண்டும். இல்லையேல் கோவையுலா அந்தாதி என எண்ணுப் படுத்திப் பாடியிருக்க ஏதில்லை. இவர் பெயரால் வழங்கப்படும் நூல்கள் முப்பால் போல மூன்றாகப் பகுப்பர்.
1. கிடைக்கின்ற நூல்கள்
மறைந்த நூல்கள் 3. ஐயத்திற்குரிய நூல்கள்.
1. கிடைக்கின்ற நூல்கள்
விக்கிரம சோழன் உலா, குலோத்துங்க சோழன் உலா, |ாசராச சோழன் உலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், தக்கயாகப் பரணி, இராமாயண உத்திர காண்டம்
_ பன.
o
(அ) மூவருலா
விககிரம சோழனுலா, குலோத்துங்க சோழனுலா, 1)ாசராச சோழனுலா என்ற மூன்றும் மூவருலா என்ற
23. பெருந்தொகை, 1804.
கூ-2