பக்கம்:கவியரங்கில் முடியரசன் (இரண்டாம் பதிப்பு).pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 () "புலவர்பெருஞ் சித்திரனார் வறுமை போக்கப் புரவலர்பாற் பல பரிசில் பெற்று வந்து குலமனையாள் கைக்கொடுத்து, நயந்தோர் யார்க்கும் கூடி மகிழ் உறவினர்க்கும் பிறர்க்கும் நல்கி, நலம் நுகர நாளைக்குத் தேவை என்று நயவா மல் , என்னொடுஞ்சூ ழாமல், நல்கிச் செலவழித்து மகிழ்வோம்நாம் எனப்பு கன்றார்; செல்வத்துப் பயணிதல் காட்டும் எண்ணம் (3) விருந்தயரும் பெருங்களிப்பால் வடக்கில் வாழ்வோர் விளைவறியார் தென்புலத்து வேந்தர் வீரம் குறைந்ததென இகழ்ந்துரைத்தார்; அதனைக் கேட்டுக் - கோளரிபோல் வெகுண்டெழுந்து தமிழர் ஆற்றல் புரிந்துகொளச் செய்தான்.அச் சேரன்; யாரும் புகழ்மிக்க தமிழினத்தைப் பழித்து ரைத்தால் எரிந்தெழுதல் தமிழனுக்குக் கடமையாகும் என்கின்ற இனப்பற்றைக் காட்டும் எண்ணம் (4) தன் பால்வந் திரந்தோனுக் கில்லை என்னான் தலைதந்தான் ஒருகுமணன்; பாடல் கேட்கும் அன்பார்வம் தலைதுாக்க அரிய நெல்லிக் கனியொன்றை அதியனுமோர் அவ்வைக் கீந்தான்; வன்பாலை நடந்தயர்ந்தோன் முரசம் வைத்து வணங்குகட்டில் என அறியா துறங்க, வேந்தன் அன்பாக அருகிருந்து கவரி வீசி அகமகிழ்ந்தான்; தமிழறிந்து மதிக்கு மெண்ணம் (5) -

  • இப்பாடல் புறநானூற்றுப் பாடற் கருத்து நயந்தோள் - விரும்பியவள்கள் சூழாமல் - கேட்காமல் முரசு கட்டிலில் உறங்கியவர் - மோசி கீரனார் கவரி வீசிய வேந்தன் - சோமான் தகடு எறிந்த பெருஞ்சேரல் இகும்பொறை