விடியக்கதிர் எழுவதுபோல் அடியார்க்கு
முன்தோன்றி விளம்பு வாயே கலியுகவர தனேபரி மளராசனே
காத்த சுந்தர மய்யனே வவியுளமன் றினில்கழு வினிலேறிட
மாலை தன்மண வாளனே
புலியெனப் பாரினில் சிலையென
வாழ்ந்திடு மகளாரு மணிமார்பனே
உதைனில் பொழுகென வாடினேன்
எந்தனுக் கருள்செய் வாயே.
ஏறவிட்டு ஏணிதன்னை வாங்குகின்ற .
மண்டலம் தன்னிலே என்னேத்
தூரவிட்டு நிற்பதுவும் நியாயமோ காத்த வனே துவக்கமாக
பாரைவிட் டோடிவந்து கழுவேறிப் பல்லாண்டு பகர்ந்து கூறு
சாரியிட்ட வாசியின்மேல் எழுத்துவந்து
நல்வாக்குச் சாற்று வாயே.
பாலகனே உந்தனையான் பரிந்தெடுத்து
வளர்த்தேனப்பா பாரில் நீயும் சாலகனுய் மாலைதனச் சிறையெடுக்க ராசனுமே சாட்டி யென்னை கோலமுடன் உனத்தேட விட்டதல்ை தேசமெங்கும் தேடி வந்தேன் ஆலமுண்ட சிவன்மகனே என்னிடரைத் தீர்த்திடவும் அருள் செய்வீரே
தீர்த்திடுவாய் எந்தனுட விபத்துத் தன்னை
திருவருளால் மாலைமண வாள னேகேள் கார்த்திடுவாய் எங்கள் குலம் தழைத் தோங்க
கருணைபொழிந் தருளுவது கடனு னக்கே பார்த்திடுவாய் எங்கள்பரி தயாந் தன்னை
பாரைவிட் டோடிவந்து பயனைச் சொல்லி
ஏற்றிடுவாய் கழுவேற ஐயா இப்போ
இரைந்தோடி என்னெதிரே வருகு வாயே