31
மீறு புகழ் வேளாள னல்ல சிங்கம்
விரித்ததுவும் தீவாசுக்கும் பளியுல்ல பிடித்தது.வு மெழுத்தாணி யல்ல சிங்கம்
போட்டதுவும் தளகர்த்த மோதிரமல்ல விசைய னெனுந் தாண்டவ ராயன் நிருபம்
எழுதியே யனுப்பிவிடக் கானுதுரை தானும் வந்த தொரு காயிதந் தன்னை நல்ல
வரிசைபெரு கான்சாயபு பார்த்தேது சொல்வான்.
கான் பதில் கடிதம்
இந்த மொழி சொன்னையே பயலே நானும் இன்னமொரு சம்ரதாயஞ் சொல்லுகிறேன் கேளு கர்த்தக ளமர்ந்திருக்கு மேடை நல்ல
கருங்கல்லுச் சவுக்கைதனைப் பேர்த்துநான் பார்த்தேன் பத்தாயந் தனிற் பணமிருந்து அதனில்
பதிவான பட்டயமு மெழுதி யிருந்துதடா இரட்டை வெங்கலக் கதவு நிலைதான் அதிலே
நேராய் கிடக்கு தென்றெழுதி யிருந்துதடா இதம் பெறவே சேனைகளைக் கூட்டி அந்த
எழிலான வெங்கலக் கதவுநிலை யெடுத்தேன் கதவு நிலையாக வைத்தாண்ட ஆதி
கர்த்தாக்கள் முன்னதிலே போட்டு யிருந்துதடா இதற்கு வகை யேதென்று எண்ணி நானும்
இயல்பாக நானதிலே யோசனைகள் செய்து ஐம்பதுபேர் தச்சர்களை யழைத்து நானும்
அரை கூடிணத்தி லாறுவரிக் கீழிறங்கி திரவியத்தைப் பேர்த்தெடுக்கையிலே அதிலே திசை மதுரை கர்த்தர்க ளெழுதி யிருந்ததைக் கேள் பரமேஸ்வரி மீனாளுக் கெதிரே வாயிற் படியில் வெகு தங்கப் பாளமிருக்கு தென்றிருக்க இப்போது திசை மதுரை மீனாள் தாயே
எனக்கிந்த திரவியத்தைக் கொடுக்கவேணு மென்றென் அப்போது திசை மதுரை மீனாள் எனக்கு
அறியவே யொருவயணஞ் சொன்னதைக் கேளு மலைக்காதே துரை கானு நீலா நானும் வைத்திருந்த திரவியத்தி லாசையாய் யிருந்தால்