45
தென்புறத்தில் சொல்லாத படிக்கு மீனாள் திருவிருப்பில் இடதுபக்கங் கெவுளியது சொல்ல என்மனது போலேயடி மீனாள் தாயே
இருந்ததுவுன் மனது பாண்டியன் மகளே என்று சொல்லித் திரும்பியே மாசா தனது
எழிலான மாளிகையினுள் வந்து சேர்ந்து விரும்பி துருமர்க்கார முத்தை அழைத்து
மிக்கதள கர்த்தனுக்கு விரைந்தெழுதலுற்றான். மாஷா தாண்டவராயனுக்கு எழுதிய கடிதம்
ஆடுமாடு பதனமடா அண்ணே உனது
ஆண்டவன் துரைமகன் பத்திரஞ் சொன்னேன் மாடு தின்னும் புலைச்சி நானண்ணே என்னை
மார்க்கமா யுறவென்று நம்பினையே அண்ணே சொல்லாத சேதியெல்லாஞ் சொன்னேன் அந்தத்
துரைமூடன் கானனுக்கு விசுவாச மில்லை பொல்லாத முழுமூடன் கானன் . நானும் புத்தி சொன்னால் கேழ்ப்பானோ கேழ்க்கவே மாட்டான் கானனை ஜெயித்திட்டா லண்ணே உன்க்கு
கலக்கங்க, ளொன்றுமில்லை மணிமார்பா குறிப்பாக வெள்ளம் வருமுன்னே அனை
கோலிக்கொள் வடக்கு சென்று நபாபிடத்திற் சொல்லு என்னை நம்பி நீயிருக்க வேண்டாம் உனக்
கியன்றபடியார் முல்லைத் தாண்டவராயா ‘. மனது ரம்மியமாக வெழுதி மடித்து
மாரியர்க் கார்கையில் கொடுத்தனுப்பி வைத்தாள் மாரியெனும் அக்காரும் வாங்கிக் கொண்டு
மணலூரு தாண்டியே திருப்புவனஞ் சேர்ந்து மண்டலீகன் கொலுவுக்கு முன்னே வைத்து வகையாகச் சேதி சொல்லி கும்பிட்டு நின்றான் மாசாவின் காயிதத்தைப் பார்த்து அந்த
மந்திரி தாண்டவ ராயன் சந்தோஷப்பட்டு மருமகளே கைலாசப் பிள்ளை தங்கை
மாசாவின் காயிதத்தை வாசியென்று சொன்னாள் மருமகனுங் காயிதத்தை வாங்கி அய்யோ
வாசிக்கத் தளகர்த்தன் காதாரக் கேட்டு