10
மனிதர்கள் உறங்கிக் கொண்டிருக்கிறார்கள், அவர்கள் இறக்கும் பொழுது விழிப்படைகிறார்கள். - குர்ஆன்
பூமியில் மனிதனின் வாழ்க்கை ஒரு போராட்டம்.
-ப.ஏற்பாடு
நீண்ட வாழ்வு நெடுந் துயரங்களுள்ளது. -இங்கிலாந்து
எவ்வளவு காலம் நாம் வாழ்ந்தோம் என்பது முக்கியமில்லை, எவ்வளவு நேர்மையாக வாழ்ந்தோம் என்பதே முக்கியம். -( ,, )
வாழ்க்கை ஒரு தறி, அதில் மாயை (என்ற துணி) நெய்யப்படுகின்றது. -( ,, )
சிந்தனை தான் வாழ்க்கை. -காலரிட்ஜ்
வாழ்க்கை, இருமுறை சொன்ன கதையைப்போல், சலிப்பாயுள்ளது. -ஷேக்ஸ்பியர்
வாழ்க்கை (தறியிலுள்ள) ஓர் ஓடம். -ஷேக்ஸ்பியர்
நல்லதும் கெட்டதுமான நூல்களைக் கலந்து நெய்தது தான் வாழ்க்கை. -( ,, )
எளிய வாழ்க்கை, உயர்ந்த சிந்தனை........
-வோர்ட்ஸ்வொர்த்
நாம் வாழ்கிறோம், மடிகிறோம்: இரண்டில் எது நல்லது என்று எனக்குத் தெரிந்ததைவிட உங்களுக்கும் தெரியாது. -பைரன்
மனிதன், காற்றை (மட்டும்) உட்கொண்டு வாழ்ந்திருக்க முடியாது. -ஃபிரான்ஸ்
வாழ்க்கை ஒரு கோட்டை, அதைப்பற்றி நம் அனைவருக்கும் ஒன்றும் தெரியாது. -( ,, )
சிறந்த வாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள், பழக்கம் அதை இன்பமாக்கும். -கிரீஸ்
வாழ்க்கையில் திருப்தியை விட அதிருப்தியே அதிகம். -( ,, )
வாழ்க்கை அபாயகரமான கடல் யாத்திரை. -( ,, )