மனிதன்
பல்லக்கில் இருப்பவன் மனிதன், பல்லக்குத் தூக்குபவனும் மனிதன் தான். -சீனா
உலகம் என்ற சாணையில் மனிதன் ஒரு கத்தி. -ஆர்மீனியா
உலகம் என்ற பானையில் மனிதன் ஒரு கரண்டி. -( ,, )
ஒரு மனிதன் வாழ்ந்தான் என்பதற்கு, அவன் ஒரு வீடாவது கட்டியிருக்க வேண்டும், ஒரு மகனையாவது பெற்றிருக்க வேண்டும், அல்லது ஒரு நூலாவது எழுதியிருக்கவேண்டும். - இதாலி
மனிதன் காற்றடைத்த ஒரு தோற்பை. -லத்தீன்
நீ கடலுடன் போட்டியிட்டுக்கொண்டிருக்கும் ஓர் ஆறு.
-( ,, )
மனிதன் நடமாடும் பிணம். - ரஷ்யா
ஒருவன் பூரண மனிதனாக விளங்க வேண்டுமானால், அவன் பொதுப் பள்ளியில் மூன்று ஆண்டுகளும், பல்கலைக் கழகத்தில் ஓராண்டும், சிறையில் இரண்டாண்டுகளும் கழித்திருக்க வேண்டும். -( ,, )
ஒவ்வொரு மனிதனும் பொதுமக்களே. -ஸ்பெயின்
மெலிந்தவனை அரை ஆள் என்றும், பருத்தவனை இரண்டு ஆள் என்றும் கணக்கிடுவதில்லை. -ஆப்பிரிகா
ம-1