மனிதன் தானே தனக்குச் சயித்தான். -இந்தியா
மலை இடம் பெயர்ந்து விட்டது என்று நீ கேள்விப்பட்டால் நம்பலாம்; ஆனால் ஒரு மனிதன் குணம் திருந்திவிட்டான் என்று கேட்டால், அதை நம்ப வேண்டாம்.
- அரேபியா
மனிதனும் விலங்குகளும் ஒன்றுபோலத்தான் இருக்கிறார்கள். -( ,, )
மேலான மனிதன் தேடுவது அவனுள்ளேயே இருக்கின்றது; சாதாரண மனிதன் தேடுவது மற்றவர்களிடம் இருக்கிறது. -கன்ஃபூஷியஸ்
மனிதனைப் போல நடந்து கொள்பவனே மனிதன்.
-ஹாலந்து
வெட்கம் மனிதனை விட்டு விலகி நின்றால், அவன் விலங்காவான்.
-சுவின்பர்ன்
தெய்வப் படைப்பில் மனிதனே தலைசிறந்தவன்.
-இங்கிலாந்து
மனிதன் இயற்கையில் ஓர் அற்புதம். -இங்கிலாந்து
மனிதனுக்கு முதன்மையான பகைவன் மனிதனே. -( ,, )
சிரிக்கும் மிருகம் மனிதன் ஒருவன் தான். -( ,, )
வெட்கப்படும் விலங்கு மனிதன் ஒருவனே. - மார்க்ட்வெயின்
மனிதர்களுக்கு மனம் பளிங்கு, பெண்களுக்கு மனம் மெழுகு. -ஷேக்ஸ்பியர்
இரக்கமற்ற தன்மையைக் காட்டிலும் மனிதனுக்கு இழிவானது எதுவுமில்லை. -ஸ்பென்ஸர்
புத்தகங்களைப் படிப்பதைக் காட்டிலும், மனிதர்களைப் படிக்க வேண்டியது அவசியம். -ஃபிரான்ஸ்
மனிதன் தனக்குள் ஒரு கொடிய விலங்கை வைத்திருக்கிறான். -ஜெர்மனி
மிருகத்தையும் அதிமானிடனையும் பிணைத்துக் கட்டும் கயிறு மனிதன். -நீட்ஷே