இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
38
ராசீ
"ஏன் சார் குப்பைத் தொட்டியை உங்கள் வீட்டு
முன்னால் போட்டுக் கொள்ளலாமே" என்றார்.
பிள்ளையார் கோவில் ஆண்டி என்று என்னை நினைத்துவிட்டார்.
என்ன சார் யோசிக்கிறீர்கள். என்றார்.
யோசிக்கவிடமாட்டார் என்று தெரிந்தது.
'உங்கள் வீட்டு முன்னால் வைத்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்; அதை நினைத்துப் பார்க்கவே சொன் னேன். இதைத் தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்' என்றார்.
- & 9
'எனக்கு மிகவும் சவுகரியமாக இருக்கும்" என்றேன்.
அது அவருக்கு அதிர்ச்சியாக இருந்தது.
மற்றவர்கள் உங்கள் வீட்டில் வந்து கொட்டு வார்களே' என்றார்.
'வீட்டில் கொட்ட மாட்டார்கள், தொட்டியில்தான் கொட்டுவார்கள்' என்றேன்.
"அதை எப்படித்தாங்கிக் கொள்ளமுடியும் என்றார்.
"சிலுவையில் ஏசு அறையப்பட்டார்; அதை நீங்கள் தினமும் சொல்லிப் பாராட்டுகிறீர்கள், அந்தப் பாராட்டு தல் எனக்குக் கிடைக்கும்' என்றேன்.