இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
குப்பைமேடு
39
வீட்டுக்கு ஒரு தொட்டிவைத்தால் நாட்டுக்கு நல்லது; இந்தப் போராட்டம் வராது" என்றார்,
"நிதி நிலை அதற்கு இடம் தராது, தொழிலாளிக்கு வேலையும் கூடும்' என்றேன்.
"பலருக்கு வேலை கிடைக்கும் பாருக்கு நல்லது' என்றார்.
"ஒரே வேலையைப் பலர்செய்தால் அதனால் இழப் புதான் ஏற்படும்” என்றேன்.
'நீங்கள் பொருளாதாரம் படித்திருக்கிறீர்களா" என்றார்.
'ஆதாரக் கல்வி, இதை அறியப் போதும்' என்றேன்.
"ஒரு செளகரியம் இருக்கிறது' என்று சிரித்துக் கொண்டே சொன்னேன்.
என்ன சொல்ல முடியுமா?" என்றார்.
"நான் எழுதும் எழுத்து அதைக் கிழித்துப்போட அருகில் இருந்தால் உதவும்" என்றேன்.
"நீங்கள் நிறைய எழுதவேண்டும்" என்று சிரித்துக் கொண்டே வாழ்த்தினார்.
'இருந்தாலும் என் மனைவிடம் ஒரு வார்த்தைகேட்க வேண்டும்' என்று என் மனைவி பக்தியை அவரிடம் அறி வித்தேன்.