இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
42
கொடிமுல்லை
குருதியிலே தோய்ந்துகொடி முல்லை அங்கே
குற்றுயிராய்க் கிடந்திட்டாள்! அழகன் வான
இருள் கிழிக்கும் மின்னொளியில் அவளைக் கண்டான்;
'என்னுயிரே!' எனவாரி அணைத்தான் மார்பில்!
அருகிவரும் சிறுகுரலில் 'அழகா’ என்று
கூப்பிட்டாள்; 'அந்தோ! நான் காத்தி ருந்தேன்;
வரவில்லை நீர்; செத்தே போனீ ரென்று
மண்வெறுத்தேன்; உயிர்மாய்த்துக் கொண்டேன்’ என்றாள்.