14 சமயந்தொறும் நின்ற தையலாள்
யிருப்பதைப் புறநானுாற்றின் 55 ஆம் பாடலால் அறிய முடிகிறது.
மூன்றாவது படைவீடு திருவாவினன்குடி என்றும், சித்தன் வாழ் மூதூர் என்றும் சொல்லப்படும் பழநித் திருத்தலமாகும். இத்தல மகிமையினைக் கந்தரலங்காரம் பின்வருமாறு குறிப்பிடுகின்றது;
படிக்கின் றிலைபழ னித்திரு காமம் படித்தவர்தான் முடிக்கின் றிலைமுரு காவென் கிலைமுகி யாமலிட்டு படிக்கின் றிலைபர மானந்த மேற்கொள விம்மிவிம்மி கடிக்கின் றிலைநெஞ்ச மேதஞ்ச மேது நமக்கினியே
-கந்தரலங்காரம் : 75
நான்காவது படைவீடு திருவேரகமாகும். திருவே ரகத்தை மலைநாட்டிலுள்ளதொரு திருப்பதி என்று கூறுவர். நச்சினார்க்கினியர். ஆனால் அருணகிரிநாதர் சோழ நாட்டிலுள்ள சுவாமிமலையே திருப்பதி என்று கருதியமை,
காவிரி யாற்றுக்கு ளேவரு
வளமைச் சோழநன் னாட்டுக்குள் ஏரக நகரிற் சீர்பெறும் மோட்சத்தை யேதரு பெருமாளே
எனவும்,
யாவு மலைகொண்டு னகத்த காவிரி புறம்பு சுற்றும்
ஏக கமமர்ந்த பச்சை மயில்வீரா எனவும் வரும் திருப்புகழ்ப் பாடற்பகுதிகளை நோக்கின் அவர் கருத்துப்புலனாகும்.
ஐந்தாவது படைவீடு குன்றுதோறாடல் என்பதாகும். குன்றுதொறும் குமரன் உறைகின்றான் என்பது