உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சின்னப்பூவே மெல்லப்பாடு-குழந்தைப் பாடல்கள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

 'மனிதர்கள் மறையும்போது அவர்களின் உலகங்களும் மறைகிறது என்பார்கள்'. - இது படைப்பாளிகளுக்குப் பொருந்தாது என்பது என் பணிவான கருத்து.
  கவிஞர் வயலூர் சண்முகம் மிகச் சிறந்த கவிஞர்.பாரதிதாசன், அண்ணா, உவமைக் கவிஞர் சுரதா நம் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் போன்ற தமிழறிஞர்களால் பாராட்டப்பட்டவர். டாக்டர் கலைஞர், உவமைக் கவிஞர் சுரதா ஆகியோரின் இலக்கிய நண்பர்குழுவில் முக்கியமானவர்.
  இருப்பினும் இந்த தமிழ்க் கவிஞனின் படைப்புகள் காலம் கடந்தே நூலாக்கம் பெறுகின்றன. சென்ற வருடம் அவருடைய 'தெற்கு ஜன்னலும் நானும்' என்ற கவிதைத் தொகுப்பை முதல் நூலாக வெளியிட்டேன். இப்போது இந்த 'சின்னப் பூவே மெல்லப்பாடு' வெளிவருகிறது. காலம் கடந்த வெளியீடு என்றாலும் எல்லா காலத்துக்கும் ஏற்றவையாக இவரது படைப்புகள் புதுமை செய்கின்றன என்றே எண்ணத் தோன்றுகிறது.
  சிறந்தக் குழந்தை இலக்கிய நூல்கள் வெளிவருவது குறைந்து விட்டது என்று நிலவும் குறையைப் போக்கும் வண்ணம் இந்தக் குழந்தைகள் நூல் அமைந்துள்ளது.
  பிஞ்சு இதழ்களில் ஒட்டிக் கொள்ளும் இயல்பான சந்தங்கள் - எளிய வார்த்தைகள் புதிய பாடுபொருள்கள் என்று குழந்தை இலக்கியத்துக்கு செம்மை சேர்க்கும் வகையில் அமைந்துள்ள கவிஞர் வயலூர் சண்முகத்தின் இந்தப் படைப்பை நூலாக்குவதில் பெருமிதமடைகிறேன்.
                     - 
                        -அன்புடன்
  நாதன்