உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிவஞானம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

ஆக்கியோன் குறிப்பு


உயிர்களிடத்து அன்பு காட்டுதற்குக் குழந்தைகள் சிறு வயதிலிருங்தே பழகி வருதல் வேண்டும் என்னும் நோக்கத்தால், பசு, குதிரை, ஆடு முதலிய மிருகங்கள் மக்களிடம் படும் துன்பங்களை ஓர் இனிய கதைபோல் தொகுத்து எழுதப்பட்டதாகும் இச் சிறு நூல்.

எல்லா உயிர்களிடத்தும் அன்பாயிருத்தலோடு நன்றி மறவாமை, பெரியோர்க்கு அடங்கி நடக்கும் தன்மை, எத்தகைய துன்பங்களிலும் சிறிதும் மனச்சோர் வடையாமை, கடவுளிடத்து அன்புடைமை, கல்லோர் நட்பு முதலிய பல சிறந்த ஒழுக்கங்களையும் இதைப் படிக்கும் குழந்தைகள் எளிதில் அடைதல் கூடும் என்பது என் எண்ணம்.

இச்சிறு புத்தகத்தைக் கடைக்கணிக்கும் பெரியோர்கள் ஒருமுறை முழுதும் படித்துப் பார்த்துத் தங்கள் குழந்தைகளுக்குப் பயன்படுமாறு செய்வார் களென நான் பெரிதும் நம்புகிறேன்.

-

இங்ஙனம் :
மயிலை சிவ முத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/5&oldid=1671752" இலிருந்து மீள்விக்கப்பட்டது