இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
பெற்றபொன் னாட்டினிலே-வந்து
மற்றவர் ஆளுவது
முற்றும் அநீதியன்றோ ?-நாட்டை
மீட்க வேண்டுமன்றோ?
அறிஞர்கள் கூடினரே-கூடி
அமைத்தனர் காங்கிரசை,
உரிமைகள் கேட்டனரே-சுதந்திர
உணர்ச்சி ஊட்டினரே.
காங்கிரஸ் மாசபையும்-தோன்றக்
காரண மாயிருந்தார்
ஆங்கில நாட்டினிலே! -பிறந்த
அறிஞர் ஹ்யூம்என்பார்.
உயரிய கொள்கையுடன்-பலரும்
உழைத்தனர் காங்கிரசில்.
‘சுயராஜ்யம்’ என்றசொல்லை--முதலில்
சொன்னவர் நெளரோஜி !
‘இன்ப சுதந்திரமாம்-அது
எங்கள் பிறப்புரிமை!’
என்றார் திலகருமே-தட்டி
எழுப்பினர் மக்களையே.