இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுதந்திர நல்லுணர்வை-நாட்டில்
தூண்டிய தலைவர்களை
விதவிதக் கொடுமைகளால்-அந்தோ!
வெள்ளையர் வாட்டினரே.
அருமைத் தலைவர்களை-தினம்
அடித்து நொறுக்கிவந்தார்.
சிறையில் அடைத்துவைத்தார்-அங்கே
சித்ரவதைகள் செய்தார்.
சொந்தமாம் நாட்டினுக்கே-வீர
சுதந்திரம் கேட்டவரை
அந்நிய தேசத்திலே -கொண்டுபோய்
அடைத்து வைத்தனரே
மக்களைச் சுட்டனரே-பலர்
மாளவும் செய்தனரே.
அக்கிர மங்கள்செய்தே-மேலும்
ஆட்சி நடத்தினரே !