அனாகதம்
அனுமானவகை
அனாகதம் - ஆதாரம் 6 இல் ஒன்று அனாதி,
அநாதி- ஏகாந்தம் எடு அனாதி சிவனுடைமை (திப 43)
அனாதி சைவம் - சைவம் 16 இல் ஒன்று.
அனான்ம வாதம் - ஆன்மா இல்லை என்னுங்கொள்கை
அனிசுவரவாதி - நாத்திகன்.
அனுக்கிரகம்-இறைவன்அருள்.
அனுட்டயம் - செயல். எ-டு ஆன்மகன்ம அனுட்டயங்கள் (சிசிபட 232)
அனுபந்தம் - பட்டறிவின் வழியது. ஆணவம் கன்மம் வழி வருதல்.
அனுபவம் அனுபூதி - பட்டறிவு, நுகர் அறிவு, இறையறிவு, பட்டறிவால் உணரும் பொழுதே பொருளின் உண்மை இயல்பு விளங்கும். எ-டு பிறியா அனுபூதிகம் தனக்காய் (சிசி பப221).
அனுபவப் பிரமாணம் - பா.உரையால் அனுமானம். அனுபவித்தல் - நுகர்தல்.
அனுபோகம் - பயன், நுகர்ச்சி. எ-டு தானே தானாய் அனு போகம் (சிசி பட 233)
அனுமானம் - கருதல், உய்மானம் அளவை8 இல் ஒன்று.
அனுமான உறுப்புகள் மூன்று -மேற்கோள், ஏது, எடுத்துக்காட்டு, சிவஞான போதத்தில் ஒவ்வொரு நூற்பாவிற்குரிய அதிகரணத்தில் இது உள்ளது.
அனுமானப்பிரமாணம் - கருதல், அளவை உய்மான அளவை. பிரமாணங்களில் சிறந்தது. மெய்கண்டார் பயன் படுத்துவது.
அனுமானப்பிரமாண விளக்கம் - காரியத்தைக் கொண்டு காரணம் உண்டு என்று உறுதி செய்வது. காணப்படுகின்ற உடம்பின் போக்குவரத்தாகிய காரியத்தைக் கொண்டு இக்காரியங்களின் நிகழ்ச்சிக்கு உடல் என்றல்கூடாது. ஆகவே, காரணமாகிய உயிரை இவ்வுடம்பு கொண்டிருக்க வேண்டும் என உறுதி செய்யப்படுதல் எ-டு. மாயா இயந்திரதனுவில் ஆன்மா, இங்கு உயிர் காணப்படாத பொருள். அதை உண்டென்று சாதிக்கக் கருதல் அளவை பயன்படுதல்.
அனுமான் - சிரஞ்சீவியர் எழுவரில் ஒருவர்.
அனுமானனுமானம் - காட்சிக்குப் புலனாகாதது. கருத்துக்குப் புலனாகும் பொருள்களை அறிவது வேறு பெயர் வசன லிங்கப் பிரமாணம். மேலும், ஒருவன் பேசுவதைக் கொண் டும் அவன் அறிவு எத்தகையது என்று மதிப்பிட உதவுவது.
அனுமான வகை -1. இருவகை:
i தன்பொருட்டு, பிறர் பொருட்டு, தான் அறியவும் தான் அறிந்ததைப் பிறர் அறியக் கூறவும் முறையே இவை நிகழ்கின்றன. ii கேவல அன்வயம் (உடன்பாடு), கேவல வயதிரேகி அல்லது வெதிரேகம் (எதிர்மறை) மூவகை : சிவஞான சித்தியார் கூறுவது.
1. பூர்வக்காட்சி அனுமானம். நாற்றத்தால் போது அறிதல்.
2. கருதல் அனுமானம்: ஒதும் உரையால் அறிவின் அளவு உணர்தல்.
32