ஆர்தல்
ஆவரணி
'ஆர்தல்-1தெவிட்டுதல்,நிரம்புதல் 2. கூடுதல் 3 கதிரவன் மையம் வருதல்.
ஆர்த்த கடல்-இரையுங்கடல்.
ஆர்த்த கரி - ஆர்ப்பரித்து வந்த பெருமலை என்னும் மும்மத யானையைத் தலைகீழாக மிதித்து,அதனைக் கொன்று கிழித்துப் போர்வை யாய் அணிந்து கொண்ட சிவன்.இந்த யானை தருகாவன முனிவர்களால் கங்காள வேடமாய் வந்த சிவனை விழுங்க அனுப்பப்பட்டது.
ஆர்த்த கிரி - இறைவன்.
ஆர்ப்பாய-இன்பமான, தளையுள்ள எ-டு ஆர்ப்பாய காயம் தன்னை (சிசிசுப 214) ஒ. பார்ப்பாய.
ஆர்ப்பு - 1 இன்பம் 2 இருப்பு. ஐங்கோச ஆர்ப்பு
ஆரா அமுது -அமிழ்தம்
ஆரா இன்பம் - தெவிட்டா இன்பம், பேரின்பம், முத்தி நிலையில் உயிர் அடையும் மகிழ்ச்சி.
ஆராத - ஓயாத எ-டு ஆராத அக்கரணத்து ஆர்ப்புண்டு (திப 47)
ஆராதகர் - அர்ச்சகர். ஆராதனை-கோயில் வழிபாடு.
ஆராய்ச்சி அறிவு - நூலறிவு. இறையறிவுக்குக் கீழானது. ஒ. பட்டறிவு. தெவிட்டா
ஆரிடதம் - முனிவர்களால் தோன்றியவை.
ஆரியம் - 1. வடமொழி 2. வேதம் ஒ. தென்மொழி.
ஆரியன்-1, புத்தன் 2அந்தணன் 3. மேம்பட்டவன்.
ஆருகதம் -சமணம், அருகக் கடவுள் வழிதோன்றிய சமயம் இதன் கொள்கை அநேகாந்த வாதம் பா. அநேகாந்தவாதம்.
ஆருகதன் - சமணன்.
ஆரும் - கூடும்.
ஆரை - 1. அச்சு, கடவுள், அது அருத்துவது ஆரை 2. யாரை ஆலமர் கடவுள் - சிவன். பா.
ஆல் - 'ஆலம் - நஞ்சு ஆலகால நஞ்சு என்பது வழக்கு.
ஆலம்பகம் - ஆதாரம்
ஆலயம் - கோவில். ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
'ஆலய விஞ்ஞானம் - இலயபரியந்தம் நிற்கும் ஒரு சிறப்புணர்ச்சி.
'ஆல் - ஆல மரம். எ-டு ஆலின்கீழ் இருந்து முனி கணத்திற்கு வேதம் அருளினான் இறைவன்.
ஆலியா உலகம் - நீர்சூழ் வையகம், எ-டு ஆலியா உலகம் எல்லாம். (சிசி பப 280)
ஆலின் கீழ் இருந்து- வேதநூல் ஒழுங்கும் உலக இயற்கையும் தெரியாததாகி உலகோர் தலை மயங்கிக் கிடந்தனர்.அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டி,ஆலமரத்தின் கீழ் அமர்ந்து வேத நூலைப் பரம சிவன் அருளிச் செய்து,அதன் பொருள் தெரிய வேண்டி ஆகம நூலும் செய்தருளினான்.
ஆவரண சத்தி - மாயை.
ஆவரணம், ஆவிருதி - மறைப்பு.
ஆவரணி - காக்குமணி எ-டு
ஞான ஆவரணி (சிசிபப 144)