இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
இயல் 3
தமிழச்சியின் உறுதிமொழி
இருளினை உண்ணக் கீழ்வான்
கதிரவன் எழுந்தான்! சேவல்
குரல்காட்டி அவனை வாழ்த்தும்;
கூட்டினில் இருந்தே சிட்டு
'வருகநீ! வருக!' என்னும்;
மகிழ்முகம் காட்டி ஊரின்
அருகுள்ள தென்னந் தோப்பில்
காக்கைகள் கரைந்த ழைக்கும்!
19
ஓடையில், குளத்தில், அந்த
ஊருள்ள புதரில், தோப்பில்
வாடையின் மோதலாலே
மலர்விழி திறக்கும்! கண்கள்
மூடிய இமைதி றந்தாள்
தமிழச்சி! மொய்க்கும் வண்டு
பாடிவந் தவள்கண் மேலே
ஏமாறிப் பறந்து மீளும்!
20