பக்கம்:தமிழச்சி-வாணிதாசன்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



"அவரவர் தாமே தம்மை
அரண்செய்து காத்தால் கற்புத்
தவறுமோ? இடைக்கா லத்தே
தமிழர்கள் பெண்ணைக் குட்டிச்
சுவரினும் கீழாய் எண்ணி
அடிமையாம் குழியிற் சேர்த்தார்;
அவர்குறு மனத்திற் கேற்ப
ஆக்கினார் புராணக் குப்பை!

17


"ஓட்டையைப் போலப் பெண்ணை
ஒதுக்கினார்; அன்னார் நாண
நாட்டினில், படிப்பில், போரில்,
நல்லறப் பண்பில் வன்மை
காட்டிட வேண்டும்!" என்றாள்.
"கலிகாலக் கொடுமை" என்று
கேட்டுநின் றிருந்த தாயும்
கிழவியும் கூச்சல் போட்டார்!

18

7