இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
அண்ணா ஒரு காலம் ! அண்ணா, ஒரு காலமென்று மகுடம் சூட்டி விட்டேன். அந்த மகுடத்தில் பதிந்திருக்கும் மணிகளை, உங்கள் முன்னால் வைக்கின்றேன். ஓர் எல்லையற்ற மனிதனை, எல்லையற்றக் காலத் தோடு இணைக்கின்றேன். எனது இணைப்பைச் சரியாகச் செய்கிறேனா என்று, என்னை நானே, எண்ணிப் பார்க்கின்றேன் - அஞ்சு கின்றேன். காலம் தோன்றியதுமில்லை - முடிந்ததுமில்லை. அதன் சிறகுகளில், வினாடிகள் இறகுகளாக அமைந்திருக்கின்றன.