பக்கம்:தமிழஞ்சலி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழஞ்சலி - காலம் எங்கே தோன்றியது என்று, இடத்தையும் குறிப்பிட முடியவில்லை. அது எப்பொழுது பிறந்தது என்று, நேரத்தையும் குறிப்பிட முடியவில்லை. சக்தியுள்ளவன், காலத்தின் முதல் முளையாகத் தன்னைக் கருதிக் கொள்கிறான். சக்தியற்றவன், முளைத்து முடிந்தவனாக நினைத்துக் கொள்கிறான். சக்தியின் துவக்கத்திற்கும் - முடிவுக்கும்; எந்தக் காலத்திலும் கட்டுப்படாதது காலம்'. தோன்றி முடிந்த அண்ணாவுக்குப் பண்புத் தொடராக - பண்புத் தொகையாக அது எப்படி அமைகிறது? இது எனது புலமையின் திறன் என்றே நினைத்து எழுதுகின்றேன். விதியின் விரிசலில் வைதீகத்தால் தவறி விழுந்தவன் - நல்லகாலம் கெட்டகாலம் என்று, காலத்திற்கு எல்லை கட்டுகிறான். வாழ்க்கையைப் பகுத்தறிவின், நாத்திகக் கட்டுக் கோப்பில் வளர்த்துக் கொண்டவன், காலத்தை அறிஞ ரோடு இணைத்து - உலகத்தைக் கணக்கிடுகிறான். கிறித்துவை முன் வைத்துத் - தன்னை ஒளியூட்டிக் கொள்கிற காலமும் உண்டு. புத்தனை விதையாக வைத்து, வளர்ந்து - விருட்சமான காலமும் உண்டு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/12&oldid=863462" இலிருந்து மீள்விக்கப்பட்டது