பக்கம்:தமிழ் இனம்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20

தமிழ் இனம்

அகற்றுவதே தமிழர் நல் வாழ்விற்கு அடிப்படையாகும் இதை எங்ஙனம் நடைமுறைக்குக் கொணர முடியும்? தமிழ் மக்கள் அனைவரும் இக்கேடுகளை நன்குணர்ந்து, சாதி வேறுபாடுகளை விட்டொழித்தல் நல்லது. கல்வி அறிவற்ற மக்கள் பெரும்பாலராக உள்ள தமிழினத்தில் இஃது எளிதில் நடை பெறாது. ஆதலால் பொறுப்புள்ள அரசாங்கம் சட்டத்தின் மூலமாக இவ்வேறுபாடுகளைக் களைதலே பொருத்தமாகும். “ஒன்றே குலம், ஒருவனே தேவன்,” என்ற திருமூலர் வாக்கு இத்தமிழ் நாட்டில் செயல் முறையில் வரும் நாளே ,நமது தமிழகம் உருப்படத்தக்கப் பொன்னாளாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_இனம்.pdf/17&oldid=1359192" இலிருந்து மீள்விக்கப்பட்டது