இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
புகழ்க்கம்பன்
எண்சீர் விருத்தம்
புகழ்மிகுத்து வாழ்வாரே வாழ்வார் நல்ல U புகழ்விடுத்தார் வாழாதார் என்ற வாய்மை k W புகல்கின்ற முந்தையருள் முதல்வனான
பொய்யாத மொழிப்புலவன் சொன்னான்; மேலும் புகழ்வருமேல் இன்னுயிருங் கொடுத்து நிற்பர்
புன்மைவரும் எனில்உலகே கிடைக்கு மேனும் இகழ்ந்ததனைக் கொள்ளார்நற் சான்றோர் என்றே
இளம்பருவப் பெருவழுதி இயம்பி நின்றான்.
பிறக்குங்கால் புகழோடு பிறப்பா ருண்டு;
பிறந்தபினர்த் தம்முழைப்பால் அறிவின் ஆற்றல் சிறக்குங்கால் புகழடைந்து வாழ்வார் உண்டு:
செலவழித்து விலைகொடுத்துப் புகழை வாங்கப் பறக்கும்பேர் சிலருண்டு; வேண்டு மென்றே
பலர்க்கதனைச் சுமத்துவதும் வழக்கில் உண்டு; பிறக்குங்கால் புகழோடு பிறந்தான் கம்பன்
பெருமைக்கே உறைவிடமாய்த் திகழ்ந்து நின்றான்.