0 கவியரசர் முடியரசன் 0 37
இயலைந்தும் ஐங்குழுவாய் அமர்ந்திருக்க,
எண்சுவைகள் பேராயம் எட்டாய் நிற்க: மயல்தவிர்ந்த புலமைஎனும் மகுடஞ் சூடி,
மக்கள் மன அரியணையில் வீற்றி ருந்து, செயல்மிகுந்த உணர்ச்சிஎனும் செங்கோல் தாங்கிச்,
சீரியநற் கற்பனைவெண் குடைமேல் ஓங்கப் பயன்மிகுந்த கவியுலகை ஆட்சி செய்யும்
பாவல்ல முடியரசன் கம்பன் ஆவன். 3
பெண்மையுடன் ஆண்மையுமென் றிரண்டும் ஒன்றின்
பேசுமொரு காதலுக்குச் சிறப்பி ருக்கும்: வண்மையுள உணர்ச்சியுடன் இலக்கணத்தின் வகைசேரின் பாடலுக்கு மதிப்பிருக்கும். பண்ணலங்கள் நன்குணர்ந்த முந்தை மாந்தர்
பாடலுக்கு வகுத்துரைத்த வழியீ தாகும்; கண்ணெனவே அவ்வழியைப் போற்றிக் கம்பன்
கவிமரபைச் சிதைக்காமல் புகழைப் பெற்றான். 4
பணிசெய்வோம் எமைத்தேர்க என்று நம்முன்
பணிந்துவரும் வேட்பாளர் வரிசை போல அணியணியாய்ச் சொல்லெல்லாங் கூடி நின்றே
அவன்முன்னே தவங்கிடக்கும்; அவற்றில் தேர்ந்து மணியனைய சொல்லெடுத்துக் கோத்து நல்ல
மதிப்பேற்றி மெருகேற்றி அணிகள் செய்தான்; அணிமிகுந்த அவன்பாடல் உலக மெல்லாம்
அளப்பரிய புகழ்பெற்று வாழக் கண்டோம். 5