38 * தமிழ் முழக்கம் 9
விருத்தமெனும் ஒண்பாவால் புகழைப் பெற்றார்
வேறொருவர் ஈங்கில்லை; கம்பன் பெற்ற பெருத்தபுகழ் பாரறியும்; வண்ண மெல்லாம்
பெருங்களிப்பால் கூத்தாடி நிற்கும் பாட்டுத் திறத்தைஒரு பழமொழியே அளந்து கூறும்;
தென்மொழியான் கம்பன்றன் வீட்டில் கட்டும் சிறுத்தஒரு தறிகூடக் கவிதை யாகச்
செப்புமெனில் புகழ்சொல்ல வல்லார் யாரே? 6
வில்வளைத்துப் பேராற்றல் விளங்கக் காட்டி
மிதிலைதரும் எழிலனங்கை மணந்தான் அண்ணல்: சொல்வளைத்துப் பாவாற்றல் துலங்கக் காட்டிச்
சொல்லரிய புகழணங்கை மணந்தான் கம்பன்: மல்விளைக்குந் தோளுடையான் மருங்கு காணா
அலைமகட்கு மணவனிநூல் சூட்டி நின்றான்; சொல்விளைக்கும் நாவுடையான் மருங்கு காணும்
கலைமகட்குச் சுவையணிநூல் சூட்டி நின்றான். 7
'கற்றறிவு கம்பனுக்குச் சிறிதும் இல்லை
காளிவந்தாள் அவன்நாவில் எழுதி விட்டாள்" பற்றுடையார் இவ்வண்ணம் கட்டி விட்டார்
பகுத்தறிவுக் கொவ்வாத கதையி தாகும்; முற்றுணர்ந்த அறிஞனவன், கலைப்பரப்பில்
மூழ்கிஎழுங் கலைஞனவன், காலங் காணாச் சொற்றமிழிற் கவிஞனவன், நறைப ழுத்த
துறைத்தமிழில் தோய்ந்தெழுந்த புலவன் ஆவன். 8