பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

0 கவியரசர் முடியரசன் 0 39

தொடுத்திருக்கும் பழம்பாடற் றொடைகள் தாங்கித்

தொன்மைக்கும் தூய்மைக்கும் முதன்மை காட்ட எடுத்திருக்கும் எங்கள்தமிழ்க் கடல்கடந்தான்

எல்லையிலாப் புகழடைந்தான்; தென்பு லத்தை அடுத்திருக்கும் வடமொழியும் எல்லை கண்டான்;

அம்மொழியைப் படிஎன்றே அவனை யாரும் தொடுத்திருந்து வற்புறுத்தித் தொலைக்க வில்லை;

துணைமொழியாய்ப் பயின்றதனிற் புலமை பெற்றான். 9

பலமொழிகள் இவ்வண்ணங் கற்று ணர்ந்த

பாங்கறிந்து கல்வியினாற் பெரியன் கம்பன் புலவனிவன் என்றெல்லாஞ் சான்றோர் வாயால்

புகழ்ந்துரைக்கப் பெருவாழ்வு வாழ்ந்தி ருந்தான்; குலமுனிவன் வன்மீகன் காதை கற்றுக்

குலவுதமிழ்க் கடவுட்கோர் கோவில் கண்டான் இலகுபுகழ் பெறவாழ்ந்தான் ஏற்றங் கொண்டான்

என்றுமுள தென்றமிழ்க்குப் புகழுந் தந்தான். 10

தனக்கொருவர் செய்ந்நன்றி மறவேல் என்ற

தமிழ்மொழியும் முந்தைவழி; அதனைக் கம்பன் மனத்திருத்திப் பெரும்புகழுக் குரியன் ஆனான்;

மதியுடையான் பாட்டுவளம், வெண்ணெய் நல்லூர் தனக்குரியான் சடையப்பன் மனமுவந்து

தந்துவந்த சோற்றுவளம் அன்றோ? அந்தப் பனைத்துணைய நன்றியினை மறவா தென்றும்

பாட்டகத்தே பாடிவைத்துப் புகழும் பெற்றான். 11 காரைக்குடி மார்ச்சு 1965

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/38&oldid=571645" இலிருந்து மீள்விக்கப்பட்டது