29
10. அந்தணர் என்போர் அறவோர் மற்று எவ்வுயிர்க்கும்.
செந்தண்மை பூண்டொழு கலான்.
(ப.ரை) எவ்வுயிர்க்கும்.எல்லா உயிர்களிடத்தும், செந். தண்மை அருளுடைமையினை, பூண்டு . கடமையாக மேற். கொண்டு, ஒழுகலான் - நடந்து கொள்ளுவதனாலே, அந்தணர் . அந்தணர், என்போர் - என்று கூறப்படுவோர், அறவோர் - ஆசைகளை அறுத்து அறநெறியிலே நின்ற முனிவர்களேயாவார்கள்.
|கடரை) எல்லா உயிர்களிடத்திலும் அருளுடன் நடந்து கொள்ளுவதால் அந்தணர் என்று சொல்லப்படுபவர்கள்: அறவோர்களாகிய முனிவர்களே யாவார்கள்.
4. அறன் வலியுறுத்தல்
(அறம் இன்னதென்பது அதனால் வரும் பயன்களைப் பற்றி வற்புறுத்தல்)
1. சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ உயிர்க்கு. |ப-ரை) சிறப்பு ஈனும் - பெருஞ்சிறப்பினையும் தரும், செல்வமும் - மேலான செல்வத்தினையும், ஈனும் . தருவதாகும், (ஆகையினால்) உயிர்க்கு - மக்களுயிர்க்கு, அறத்தின் அறத்தினைவிட, ஊங்கு மேம்பட்ட, ஆக்கம் செல்வம், எவன் - வேறு என்ன இருக்கின்றது.
(க-ரை பெருஞ் சிறப்பினையும் செல்வத்தினையும் அளிக்கின்ற அறத்தினைவிட மக்களுயிர்க்கு மேம்பட்ட செல்வம் வேறு என்ன இருக்கின்றது?