11
இம்முயற்சிக்கு மேன்மேலும் ஊக்கமளித்து உதவும்வண்ணம் செந்தமிழும் சிவநெறியும் வளர்க்கும் நல்லறிஞர்களை அன்புடன் வேண்டுகின்றேன். தமிழ்த் தெய்வத்தின் திருவடிகட்கு என்னாலியன்ற தொண்டுகளைச் செய்ய என்னை உருவாக்கிப் பணிகொள்ளும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கும், அதனை நிறுவிய பெருங்கொடை வள்ளல் செட்டிநாட்டரசர் அண்ணாமலையரசர் புகழுருவிற்கும் அவர் தம் மைந்தரும் பல்கலைக்கழக இணைவேந்தரும் ஆகிய டாக்டர் ராஜா சர் மு.அ.முத்தைய செட்டியார் அவர்கட்கும் என் உளமார்ந்த நன்றி என்றும் உரியதாகும். இவ்வுரை விளக்கத்தினை எழுதும்படி ஊக்கியதுடன் இதனை வெளியிடும் பொறுப்பினையும் உளமுவந்து ஏற்றுக் கொண்ட என் கெழுதகை நண்பர்கள், சிதம்பரம் இராமசாமிச் செட்டியார் நகர உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் திரு பு.ர.சுவாமிநாதன், M. A , I.T., ஒரத்தூர் நிலக்கிழார் வித்துவான், திரு சு.குஞ்சிதபாதம் பிள்ளை ஆகியவர்கட்கு எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்ளும் கடமையுடையேன். இந் நூலினக் குறித்தகாலத்தில் வனப்புற அச்சிட்டுதவிய சிதம்பரம் பாண்டியன் அச்சகத்தாரது பணி பாராட்டுதற்குரியதாகும்.
அன்புள்ள,
க. வெள்ளைவாரணன்