இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
வெண்ணிலவு
பூபாளம்
ரூபகம்
எடுப்பு
நீல வானைக் கோலம் செய்ததே!-வெண்
ணிலவு இன்பப் பாலை வார்த்ததே!
மேல் எடுப்பு
காலம் மாற்றும் கருத்தைப் போலக்
கவியின் உட்பொருள் பொருத்தம் போல !
அமைதி
மருண்ட மக்களின் அறிவைக் கொளுத்தும்
தெருண்ட மேலவர் செந்தமிழ்ப் போலே
இருண்ட மேகத் திடை புகுந்தே
உருண்டு செல்லும் வெள்ளித் தட்டு
உயர்வு தாழ்வு இன்றி மக்கள்
உடைமை பொதுவாய் அடைந்து வாழத்
துயரம் நீக்கும் இன்ப நிலவைத்
தோப்புத் துரவு எங்கும் சேர்த்தே.
18