இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காண்பேனோ?
வாசஸ்பதி ஆதி
எடுப்பு
வீரத்தாய்களை நேரில் காண்பேனோ-என்னரும் நாட்டு
வீரத்தாய்களை நேரில் காண்பேனோ?
மேல் எடுப்பு
போர்க்களம் நோக்கிப் போவென விடுத்துப்
புன்னகை பூத்த பூங்குழல் நல்லார்.
அமைதி
காரென முரசம் ஒலித்ததைக் கேட்டாள்
கணவனை முன்னாள் களத்திரை யிட்டாள்
வாரினாள் மகன்தலை வாட்கை கொடுத்தாள்
மறத்தமிழ் வலிமையைக் காட்டென விடுத்தாள்.
புறமுது கிட்டதாய்ப் புகன்றிடக் கேட்டாள்
பூண்முலை அறுத்திட வாளினைத் தொட்டாள்
நிறைபிணக் குவியலில் தன்மகன் தேடி
நேரடி பட்டதைக் கண்டு மகிழ்ந்தாள்.
41
41