இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இன்பத் திராவிடனே!
இராகமாலிகை ரூபகம்
இன்பத் திராவிடனே-மகனே
என்னரும் நாட்டவனே.
உன்னை மறந்து விட்டாய்-அதனால்
உன்னிலை தாழ்ந்ததடா!
செஞ்சுருட்டி
பொய்யும் புனைந்துரையும்-நிறைந்த
புன்னூல் புராணமடா!
மெய்யென நம்பியதால்-சாதிமத
வேற்றுமை குழ்ந்ததடா!
புன்னுகவராளி
காதலைப் போர்த்திறத்தை-இயற்கைக்
காட்சிப் பெருவளத்தை
ஓதி உணர்ந்திடுவாய்-இவையே
உன் தமிழ் நூல்களடா!
வசந்தா
ஒன்றாய்த் தொழில் புரிந்தாய்-முடக்காமல்
உண்டு களித்திருந்தாய்
இன்றேன் பசிக்கொடுமை-எனச்சற்றே
எண்ணி நினைத்த துண்டா ?
42