இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
10
அண்மையிலே ஜனாதிபதி ராதா கிருஷ்ணன். ஆமதாபாத் விழாவொன்றில் பேசும்போது. உண்மையிலே 'கசப்பான உண்மை’ ஒன்றை உள்ளங்கை நெல்லியென எடுத்துச் சொன்னார்.
'பலவாண்டு ஆசிரியனாய் இருந்த வன்நான் படிக்கவரும் மாணவரை எய்தும் தொல்லை அலைக்கழிக்கும் பிரச்சனைகள் அனைத்தும் அறிவேன் ஆனாலும் இன்றுள்ள போக்கே வேறு.
இப்போது மாணவர்க்கு வாழ்க்கை நோக்கில் எந்தவிதக் குறிக்கோளும் இருக்கக் காணோம்! ஒப்புக்கே படிக்கின்றார்; கல்வி யாலே ஒருபயனும் விளையாதென எண்ணுகின்றார்.!
எதிர்காணும் வாழ்வதனில் மாணவர்க்கே இம்மியதும் நம்பிக்கை துளிர்க்கவில்லை! கொதிக்கின்ற நெஞ்சத்தில் அமைதி வந்தா கொலுவிருக்கும்? மென்மைக்கு வழிதான் உண்டா