பக்கம்:நடந்து கொண்டே இரு-இளைஞர் கவிதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

நடந்து கொண்டே இரு!
வெல்வோம் வா!

எங்கோ ஓரிடம் நமக்குண்டு! என்றோ ஒர் நாள் நமக்குண்டு! அங்கே நாமும் அடைவோம் வா! அந்நாள் கனவைப் படைப்போம் வா!

பாழ்செய் கவலைகள் முடிந்துவிடப் பாயும் இருளும் விடிந்துவிட வாழ்வுக் குயிலின் பண் கேட்க வானப் பேரொளி கண்சிமிட்டும்

அங்கே, அங்கே, செல்வோம் வா! அன்றே அன்றே வெல்வோம் வா!

தோற்ற கைகளே வெல்வதுண்டு! தூர்ந்த ஊற்றும் வாய்திறக்கும்! நாற்றை நடுவதே நம்கடமை! 'நாளைய அச்சம்' வெறும் மடமை!

தோழனே! அதனால் எழுவோம் வா! செவ்வயல் இன்றே உழுவோம் வா!